போரில் உயிர் பிழைத்த ஆசிய கருப்பு கரடி!!

போரில் உயிர் பிழைத்த ஆசிய கருப்பு கரடி!!

உக்ரைனில் நடந்த போரில் உயிர் பிழைத்த ஆசிய கருப்பு கரடி, தற்போது ஸ்காட்லாண்டில் உள்ள ஃபைவ் சிஸ்டர்ஸ் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்டது.

உக்ரைன் மிருகக்காட்சிசாலையில் உள்ள 200 விலங்குகளில், உயிர் பிழைத்த சில விலங்குகளில் இந்த கரடியும் ஒன்றாகும்.

யாம்பில் என்று பெயரிடப்பட்ட அந்த கரடியின் வயது 12.

அந்த கரடியை நன்றாக கவனித்துக் கொள்ள சிறந்த குழு உள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர் கூறினார்.