முதலாளி உடன் ஏற்ப்பட்ட மோதலால் மாணவர்களை பலி வாங்கிய ஊழியர்கள்!!

சீனாவில் குங்ஃபூ பயிற்சியாளர்கள் இருவருக்கு ஜனவரி 8ஆம் தேதி அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் சீனாவில் உள்ள ஒரு தற்காப்பு கலைப் பள்ளியின் முதலாளியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பள்ளியில் வழங்கப்படும் உணவில் எலி பாஷானத்தை கலந்தனர்.

இச்சம்பவம் 1997 ஆம் ஆண்டு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விஷம் கலந்த உணவை அருந்திய 130 க்கும் மேற்பட்டோருக்கு மறுநாள் காலை வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஏழு மாணவர்கள் உயிரிழந்ததாக அவர்கள் கூறினர்.

சுமார் 26 வருடங்களாக வழக்கில் இருந்து தப்பித்த அவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு 2023 ஆம் ஆண்டு கைது செய்தனர்.