தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!!

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!!

பொன்னமராவதி,ஜன.10-
பொன்னமராவதியில் அரசுபோக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் சுமார் 50 பேருந்துகள் இயங்கி வருகின்றது.  போக்குவரத்து ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக கூறி வழக்காமாகவே  10 பேருந்துகள் இயங்குவதில்லை. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், பணிக்கு செல்ல வேண்டிய தனியார், அரசு ஊழியர்கள் மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகளும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.