பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபர்!!

பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபர்!!

சிங்கப்பூரில் 43 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற 65 வயதான Quek Eng Hock என்ற நபரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 6ஆம் தேதி அன்று புக்கிட் பாடோக்கில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அன்று காலை 8:20 மணியளவில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் ஐந்து வயது மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அந்த சிறுவன் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

ஜனவரி 26 ஆம் தேதி அன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.