சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்!!

சிங்கப்பூரில் ஜனவரி 4 ஆம் தேதி அன்று அதிகாலை 2.30 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 75-இல் jurong region line க்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது. வெளிநாட்டு ஊழியரான மியான்மரை சேர்ந்த 27 வயதுடைய நபர் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது 7.5 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு Ng Teng Fong General மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

கடுமையான காயங்களால் அவர் உயிர் பிரிந்தது. அதனால் அங்கு நடைபெற்று வந்த அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக நிலப்போக்குவரத்து ஆணையம்(LTA) கூறியது.

இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருவதற்கு உதவி வருவதாகவும் தெரிவித்தது.

உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறியது. அவர் “Jianxi Construction Development” நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.