ரயில் ஸ்டேஷனில் மூன்று பேரை கத்தியால் குத்திய பெண்!! பின்னணி என்ன?

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரயிலில் நடந்த கத்திகுத்து சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணை காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த தாக்குதலில் மூன்று ஆண்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த தாக்குதல் குறித்து இரவு 11 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறினர்.

இச்சம்பவம் ஜனவரி 3ஆம் தேதி அன்று டோக்கியோவில் உள்ள அகிஹபாரா ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் கூறியது.

காயமடைந்த அந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.