முன்னாள் காதலியை கொலை செய்த காதலன்!!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான Narumi Kurosaki என்ற பெண்ணை, சிலி நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய நிக்கோலஸ் செபெடா என்ற நபர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பெண் நிக்கோலசின் முன்னாள் காதலி என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிக்கோலசுக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நிக்கோலசின் வழக்கறிஞர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.மேல்முறையீட்டு விசாரணையில் தான் ஒரு நிரபராதி என்று கூறினார்.

ஆனால் நீதிமன்றம் அவரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது.மேலும் Narumi- இன் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.