நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!!

டிசம்பர் 20ஆம் தேதி அன்று வடகிழக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மை ஆண்டுகளில் சீனாவின் சுரங்கத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு சுரங்கங்களில் இந்த ஆண்டு அதிக விபத்துகள் நேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.