சிங்கப்பூரில் வியாபார போட்டி காரணமாக மூன்று பேரைக் கத்தியால் குத்திய முதியவர்!!

சிங்கப்பூரில் 61 வயதான நபர் ஒருவர் மூன்று பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் டிசம்பர் 20ஆம் தேதி அன்று பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசாவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து மாலை 4.50 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றவாளியான 61 வயது முதியவர் அரை மயக்கத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் காயமடைந்தவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் 53 மற்றும் 55 வயது உடைய பெண்கள் என்றும், ஒருவர் 53 வயதுடைய ஆண் என்றும் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நால்வரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.