KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல??

KING ARUN அவர்களை நம்மில் பலருக்கு தெரியும்.KING ARUN YouTube,Telegram, Facebook Channel வாயிலாக சிங்கப்பூர் பற்றிய தகவல்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்ந்து வந்தார். அதோடு பலருக்கு இலவச வேலை வாய்ப்புகள், குறைந்த செலவில் முன்பணம் பெறாமல் வேலை வாய்ப்புகளை வாங்கி தந்துள்ளார். நமது SG TAMILAN இணைய பக்கத்திற்கும் பல தகவல்களை அளித்து வந்தார்.

அவரின் YouTube சேனலில் கிட்டத்தட்ட 70,000 பாலோவர்ஸ்கள் இருக்கின்றனர்.அவரது சேனலில் சிங்கப்பூரில் அவ்வப்போது மாறுகின்ற மாற்றங்கள், புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பற்றி தகவல்களை அளித்து வந்தார்.

போலி ஏஜென்களிடம் ஏமாறாமல் எப்படி சிங்கப்பூருக்கு செல்வது? என்பது பற்றிய தகவல்களையும் கூறி வந்தார். அவரது ஃபாலோவர்ஸ்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் தனது நேரங்களை ஒதுக்கி YouTube, Telegram வாயிலாக Live – இல் பதிலளிப்பார். அவர் இவ்வாண்டு இந்தியா வந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றார் என்பது பலருக்கு தெரியும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவருக்கு என்னவாயிற்று? என்ற கேள்வி ஃபாலோவர்ஸ்களிடம் எழுந்தது. Youtube சேனலிலும் வீடியோ போடவில்லை. ஏன்? எதற்காக அவர் வீடியோ போடாமல் இருக்கிறார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் அவர் இந்தியாவிற்கு வந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது.அவருக்கு என்ன நடந்தது? எதனால் வீடியோ போடாமல் இருந்தார்? என்பது குறித்த பல கேள்விகளுக்கான பதிலை KING ARUN சேனலில் எதிர்பார்க்கலாம்.

நமது ஃபாலோவர் ஒருவர் திருச்சி ஏர்போர்ட்டில் கிங் அருண் அவர்களைப் பார்த்ததாக Facebook பக்கத்தில் போட்டோவை ஒன்றை அனுப்பியுள்ளார்.

கூடிய விரைவில் நம்மை தொடர்பு கொள்வார் என்று எதிர்பார்ப்போம்.இனி வரும் நாட்களில் சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் மற்றும் தகவல்களை அவரிடம் எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.மீண்டும் அவரது சேவை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

நமது SG TAMILAN சார்பாக அவரது சேவை மீண்டும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.