டாக்ஸி கிடைக்காத விரக்தியில் தோழியை தள்ளி மரணத்தை விளைவித்த நபர்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 33 வயதான Jason Ong Bing Qi என்ற நபர், தனது தோழியான Joey என்பவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி அன்று ஜேசன் மற்றும் ஜோயி ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்ல முற்பட்டனர்.

அவர்கள் இருவரும் டாக்ஸிக்காக பல மணி நேரம் காத்திருந்தார்கள்.டாக்ஸி எதுவும் கிடைக்காததால் மனம் உடைந்த ஜேசன், ஜோயியை விரக்தியில் கீழே தள்ளினார் என்று விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அங்கிருந்த CCTV-யில் இந்த காட்சி பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கீழே விழுந்ததில் ஜோயி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தலையில் அடிபட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று ஜேசன் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.