வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது.

இதனால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவும் மீட்புப் பணியாளர்கள் படகுகளில் செல்கின்றனர்.

ஆற்றின் கரையோரத்தில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வெள்ளம் காரணமாக ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

141 நிவாரண முகாம்களில் மீட்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற பல அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.