சிங்கப்பூரில் நடந்த கோர விபத்து!!

சிங்கப்பூரில் டிசம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமையன்று சுங்கே காடுத்திலுள்ள (Sungei Kadut) உட்லண்ட்ஸ் சாலை மற்றும் மண்டாய் எஸ்டேட் சந்திப்பில் இரண்டு டிரக்குகள், நான்கு லாரிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து நேர்ந்துள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை சம்பவ இடத்திற்கு வந்தபோது லாரியின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கி இருப்பதையும்,மற்றொரு லாரிக்கு அடியில் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கிடைப்பதைக் கண்டனர்.

அவர்கள் இருவரையும் மீட்டனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கவனக்குறைவாக வண்டியை ஓட்டி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவருக்கு வயது 54.