பனிப்பொழிவால் தண்டவாளத்தில் வழுக்கிய மெட்ரோ ரயில்!! பயணிகளின் கதி என்ன?

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளானதில் 102 பேர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து டிசம்பர் 14ஆம் தேதி அன்று மாலை 6.57 மணிக்கு நிகழ்ந்தது.

அன்றிரவு 11 மணியளவில் சுமார் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 15ஆம் தேதியன்று காலை 423 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அதிகமான பனிப்பொழிவு காரணமாக பெட்டிகள் தண்டவாளத்தில் வழுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

பயணிகளிடம் இந்த விபத்து குறித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ரயில் நிர்வாகம் தெரிவித்தது.மேலும் பெய்ஜிங்கில் இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்று தெரிவிக்கப்பட்டது.