டென்னசியை புரட்டி போட்ட சூறாவளி!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று அமெரிக்க மாநிலமான டென்னசியில் கடுமையான புயல் மற்றும் சூறாவளி தாக்கியது.

இதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

இந்த சூறாவளி ஏற்பட்டதன் விளைவாக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.

இந்த சூறாவளியால் பல வீடுகள், மரங்கள் மற்றும் மின்கம்பிகள் சேதம் அடைந்துள்ளன.

பொதுமக்கள் சாலைகளில் செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.