பெருவை ஒரே நாளில் தாக்கிய நிலநடுக்கங்கள்!!

டிசம்பர் 10ஆம் தேதி அன்று மத்திய பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதே பகுதியில் அதே நாளில் ஏற்பட்ட 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசிபிக் நெருப்பு வளையத்தில் பெரு நாடு அமைந்துள்ளதால் இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.