நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் MST-க்கு சொந்தமான முகாமில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இணையதள சேவைக்கான கம்பிகளை நிறுவும் பொழுது மின்சார கம்பிகளில் short circuit ஏற்பட்டது.

அதுவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தீ விபத்தில் இறந்தவர்களில் ஆறு பேர் முகாமில் வசிப்பவர்கள். மூன்று பேர் இணைய நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதில் ஒருவர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஆனால் அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளது.