கவனக்குறைவால் டாக்ஸியை ஓட்டி மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்!!

சிங்கப்பூரில் உள்ள பாசிர் ரிஸில் 76 வயதுடைய பெண் பாதசாரி மீது டாக்ஸி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் டிசம்பர் 10-ஆம் தேதி(நேற்று) மாலை பாசிர் ரிஸ் ரைஸ் மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் 3 சந்திப்பில் நேர்ந்தது.

அன்றிரவு 7.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

58 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்ஸியை கவனக்குறைவாக ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.மேலும் விசாரணை தொடர்வதாகவும் கூறியது.