பறவை காய்ச்சல் பரவுகிறதா? எங்கு பரவுகிறது?

ஜெர்மனியின் கிழக்கு மாநிலத்தில் உள்ள Schonberg என்ற பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள பறவைகளுக்கு H5N1 பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுமார் 6,700 வாத்துகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மை வாரங்களாக ஜெர்மனியில் இது போன்ற பல பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் இந்த நோய் தொற்று பாதிப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் பறவைகளை அழித்து விட்டது.

பொதுவாக காட்டுப் பறவைகளால் இந்த நோய் தொற்று ஏற்படுவதால் பண்ணைகளில் உள்ள பறவைகளை உள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.