பிரேக் கோளாறு காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து!! பயணிகளின் நிலைமை என்ன? பலி எண்ணிக்கை?

டிசம்பர் 5ஆம் தேதி அன்று பிலிப்பைன்சில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 30 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்வர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 4 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு தான் இந்த விபத்துக்கு காரணம் என்று அவர்கள் கூறினர்.

மேலும் இப்பகுதியில் ஏற்படும் இரண்டாவது விபத்து இதுவென்று அவர்கள் தெரிவித்தனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கும்,இறுதி சடங்குகளுக்கு அந்நாட்டின் அரசாங்கம் உதவி செய்வதாக உறுதியளித்தது.