துடுப்பு சவாரி செய்யும் போது சுறாவால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!!

டிசம்பர் 4ஆம் தேதி அன்று பஹாமாஸில் paddle boarding செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணி சுறாவால் தாக்கப்பட்டார்.அந்த பெண்மணி பாஸ்டனைச் சேர்ந்தவர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பெண்மணி மேற்கு New Providence-ல் உள்ள ரிசார்ட்டின் பின்புறத்தில் paddle boarding செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை சுறா தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.அவருடன் ஆண் ஒருவரும் இருந்தார்.

இதை பார்த்த lifeguard உடனடியாக அங்கு சென்று அவர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

அந்தப் பெண்ணின் உடலின் வலது பக்கத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு அவர் CPR அளிக்கப்பட்டும் பலன் அளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த பெண் உயிரிழந்ததாக அவர்கள் கூறினர்.மேலும் அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணுக்கு எந்த ஒரு காயமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பஹாமாஸைச் சுற்றி 30 முதல் 40 வகையான சுறாக்கள் இருப்பதாகவும், அந்த பெண்ணை தாக்கியது எந்த வகை சுறா என்பது தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் இப்பகுதியில் சுறா தாக்குதல்கள் அரிதானவை என்று அவர்கள் தெரிவித்தனர்.