தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!!

டிசம்பர் 3ஆம் தேதியன்று 38 வயது நபர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்தி கொன்றார்.
மேலும் ஐந்தாவது நபரான 61 வயதான பெண்மணியும் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நியூயார்க் நகரத்தின் Queens Borough பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இரண்டு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

குற்றவாளி கட்டிடத்திற்கு தீ வைத்ததால் அதிகாரிகளால் உடனடியாக வீட்டிற்குள் நுழைய முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் இருவரையும் குற்றவாளி கத்தியால் குத்தினார்.

அவர்களில் ஒருவர் குற்றவாளியை சுட்டுக் கொன்றார் என்று தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்டனர் .

காயமடைந்த இரண்டு அதிகாரிகளும் விரைவில் குணமடைவார்கள் என்று கூறப்பட்டது.