ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துவோர்க்கு ஓர் அறிவுரை!!

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக லேட்டஸ்ட் செக்யூரிட்டி அப்டேட்களை நிறுவுமாறு SingCERT வலியுறுத்தியது.

ஆப்பிள் நிறுவனத்தின் சில சாதனங்களை மோசடிக்காரர்கள் ஊடுருவ முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் 20 வது முறையாக அவர்கள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் ஆட்டோமேட்டிக் சாஃப்ட்வேர் அப்டேட்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.