குஷ்பு ‘சேரி மொழி’ என விமர்சித்த விவகாரம்!!

நடிகை குஷ்பு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு: நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது twitter பக்கத்தில் சேரி மொழி என விமர்சித்தார்.இதைக் குறித்து கண்டனம் தெரிவித்த நிலையில்’சேரி’ என்பதற்கு பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ‘அன்பு ‘என்பது பொருள் என அவர் விளக்கமும் அளித்துள்ளார். இந்த நிலையில் குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதை அடுத்து நடிகை குஷ்பு வீட்டில் பலத்த பாதுகாப்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பு உருவ பொம்மை எரிப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் அணியினரால் சத்தியமூர்த்தி பவன் முன்னிலையில் நடிகை குஷ்பு உருவ பொம்மை எரிப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மன்னிப்பு கேட்க முடியாது குஷ்பு: சேரி மொழி என்பதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக குஷ்பு தெரிவித்துள்ளார். ‘வேளச்சேரி ,செம்மஞ்சேரி’ என்பது போல் சேரி என்று கூறினேன் அதில் ஒன்றும் தவறு இல்லை . நான் பார்க்காத வழக்குகளா? என் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த வருவதாக கூறினார்கள் ஆனால் வரவில்லை அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்ன சவாலாக கூறினார்.