பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக பதிவான நிலையில் தற்போது 6ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

இருவரை காணவில்லை என்றும், அவர்களை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

60 கிலோமீட்டர் ஆழத்தில் Mindanao தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பெரிய மால்கள் மற்றும் ஒரு பள்ளியின் கூரைகள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தால் மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டின் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.