மனிதநேயச் செயலால் காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்!! டாக்ஸி டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!!

சிங்கப்பூரில் Bishan பகுதியில் வசித்து வந்தவர் Mr.Kitahara Yutaro. இவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் திடீரென நவம்பர் 5 ஆம் தேதி இரவு 11.25 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து Mr. Kitahara டாக்ஸி ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பு மேற்கொள்ளும் போது ஏற்பட்ட சிக்னல் பிரச்சனையால் டாக்ஸி டிரைவர் Benny Yeo – ஆல் தெளிவான செய்தியை பெற இயலவில்லை. இருப்பினும் 18 வருடங்களாக ஓட்டுநர் தொழிலில் மிகவும் நேர்மையுடன் செயலாற்றி வந்தவர் இவர்.

எனவே இப்போதும் அதே உணர்வோடு செயல்படவே நினைத்துள்ளார். அழைப்பு வந்த சிறிது நேரத்திலையே Mr. Kitahara வின் முகவரியை கண்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பிரசவ வலியில் இருக்கும் Kitahara – வின் மனைவியை பத்திரமாக டாக்ஸியில் ஏற்றியுள்ளார். அப்போது குழந்தையின் தலை வெளியில் தெரிவதாக Kitahara கூறியுள்ளார்.10 நிமிட தொலைவில் இருந்த KK குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமைக்கு செல்லும் வழியிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக இருப்பதை உறுதி செய்த டாக்ஸி டிரைவர் Benny Yeo பதட்டம் இல்லாமல் விரைந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்,சேய் இருவரும் நலமாக இருப்பதாக Kitahara டாக்ஸி டிரைவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.மேலும் அவரின் நேர்மையையும் மனிதநேயத்தையும் பாராட்டும் வகையில் ,S$ 100 அளித்துள்ளார்.

தனது தொழிலை நேர்மையுடன் செய்த மனநிறைவோடு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார் Benny.