லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள்!!என்னென்ன கட்டுப்பாடுகள்?

தீபாவளியை முன்னிட்டு , பொதுமக்களுக்கு போலீஸாரின் முக்கிய அறிவிப்பு.

தீபாவளி பண்டிகை நாட்களில் பொதுவாக மக்கள் கூட்டம் வெகுவாக காணப்படுவது இயல்பு.இதன் காரணமாக சிங்கப்பூரின் , லிட்டில் இந்தியா பகுதியில் பல்வேறு கட்டுப்பாடு நெறிமுறைகளை போலீஸார் அறிவித்துள்ளனர்.

வரும் நவம்பர் 10 , இரவு 10.30 மணியில் இருந்து நவம்பர் 14, காலை 7 மணி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மது அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது.மேலும் அதிக மக்கள் கூட்டம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று என்பதால் மக்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

அதுமட்டும் இன்றி அதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாற்று வழிப்பாதையில் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லிட்டில் இந்தியா – வின் அருகில் உள்ள ஒரு சில சாலைகளின் நடைப்பாதைகள் மூடப்படும் எனவும் அதற்கான மாற்று வழிப் போன்றவற்றை அந்தந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகள் மூலம் அறியவும் பொதுமக்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்