சிங்கப்பூரில் வெகுசிறப்பாக நடந்த தீமிதி திருவிழா!!

சிங்கப்பூரில் உள்ள சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நேற்று வெகுசிறப்பாக தீமிதி திருவிழா நடந்தது.

இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

இந்த திருவிழா நேற்று (நவம்பர் 6) காலை 6.15 மணியளவில் ஆரம்பமானது.

முதலில் சக்தி கரகத்தை தலையில் சுமந்து தலைமை பண்டாரம் ஆரம்பித்து வைத்தார்.

தீமிதியில் 3000 க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

தீமிதியை 600 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் வலம் வந்தனர்.

திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டார்.