துப்பாக்கி சூடு நடத்திய 86 வயது முதியவர்!!தபால் அலுவலகத்தில் தஞ்சம்!! சிலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய முதியவர்……

அக்டோபர் 31ஆம் தேதி அன்று ஜப்பானின் சைட்டாமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் ஒருவரும், நோயாளி ஒருவரும் காயம் அடைந்தனர்.

அதன் பிறகு அவர் வாராபியில் உள்ள தபால் நிலையத்திற்குள் சென்று அங்குள்ள சிலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பிறகு ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறையினர் கட்டிடத்துக்குள் நுழைந்து அந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியை கைப்பற்றினர்.