பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து….பெட்டிகளுக்கு அடியில் சிக்கி உள்ள உடல்கள்……

அக்டோபர் 23ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் பங்களாதேஷின் பைராப் நகரில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

தன்னார்வலர்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலரின் உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பங்களாதேஷில் ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் என்று அவர்கள் கூறினர்.