மின்னஞ்சல் மூலம் வந்த தாக்குதல் மிரட்டல்…..முன்னெச்சரிக்கையாக பயணிகள் வெளியேற்றம்…..

புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் தாக்குதல் தொடர்பான மிரட்டல் வந்ததை அடுத்து பிரான்ஸ் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதன் மூலம் அதிகாரிகள் சோதனை செய்ய உதவியாக இருக்கும் என்றும், மேலும் தாக்குதல் அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யான தகவலா என்பதை தெளிவுபடுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Paris-க்கு வெளியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான The Palace of Versailles-இல் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.கடந்த சனிக்கிழமை முதல் மூன்றாவது முறையாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை நண்பகலில் இருந்து Nice, Lyon மற்றும் Lille விமான நிலையங்கள் வழக்க நிலைக்கு திரும்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், பல தாக்குதல்களுக்கு பிறகு பிரான்ஸ் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.