சிங்கப்பூரில் காற்றின் தரம் குறித்த தகவல்……

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 9) புகை மூட்டம் தொடர வாய்ப்புகள் குறைவு என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

இன்று சிங்கப்பூரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சிங்கப்பூரில் காற்றின் தரத்தைக் குறித்து அமைப்பு கூறியுள்ளது.

காற்றின் தரம் மிதமான அளவை தொட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது.

நேற்று மாலை 6 மணி நேர நிலவரப்படி 24 மணி நேர PSI காற்று மாசு குறியீடு குறித்த தகவலை வெளியிட்டது.

24 மணி நேர PSI குறியீடு என்பது தினசரி சராசரியான 6 வகையான மாசுபாடுகளின் அளவை குறிக்கிறது.

அடுத்த நடவடிக்கைகளை திட்டமிட இதனை மனதில் வைத்து கொண்டு மேற்கொள்ளலாம் என்றது.

காற்று மாசுபாடு குறியீடு எண் 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற அளவை தொட்டுள்ளதை குறிக்கிறது. இதனை தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியது.