சிங்கப்பூரில் பிக்கப் டிரக்கின் மீது விழுந்த மரம்……

சிங்கப்பூரில் ஓபிர் ரோட்டில் செப்டம்பர் 21-ஆம் தேதி பிக்கப் டிரக்கின் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6.35 மணியளவில் தகவல் வந்ததாக Today- யிடம் சிங்கப்பூர் குடிமை தற்காப்புபடை கூறியது.பிக்கப் டிரக்கின் மீது விழுந்த மரத்தை கிரேன் உதவியுடன் எடுக்கப்பட்டது.

பிக்கப் டிரக்கின் டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட டிரைவர் மீட்கப்பட்டார். அவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் இருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது.