சிங்கப்பூரில் தற்காலிகமாக மூடப்பட உள்ள Merlion சிலை……

வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை Merlion சிலை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

சீரமைப்பு பணிகள் நடைபெறுவதற்காக மூடப்பட உள்ளதாக சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்தது.

பொதுமக்கள் அந்த சிலையின் சீரமைப்பு பணிகள் முடியும் வரை அதை படம் எடுக்க அனுமதி கிடையாது.

இருப்பினும்,பணிகள் முடிவடையும் வரை மெர்லயன் பூங்காவில் உள்ள சிறிய Merlion சிலை அருகே புகைப்படம் எடுக்கலாம்.முன்னதாக ஜூலை 27,28 ஆகிய தேதிகளில் பாரமரிப்பு பணிகள் நடைபெற்றது.