2 வயது மகளை கொன்ற தந்தை…..உடலை எரித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பெட்டியில் மறைத்த கொடூரம்…..

35 வயதான சிங்கப்பூரர் தன் மனைவியுடன் சேர்ந்து 2 வயதான தன் மகளை கொன்றதை மறைத்த குற்றத்திற்காக அவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 18 பிரம்படிகள் வழங்கப்பட்டது.

இறந்த அந்த 2 வயது குழந்தை உட்பட, இந்த தம்பதியினருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள்.

2011 இல் பிறந்த அந்த குழந்தை மூன்று முதல் நான்கு மாதங்கள் இருக்கும்போது, குற்றவாளியான அவளது தந்தை போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இருந்தார்.

அவளது தாயால் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாத காரணத்தால், குழந்தை foster care-ல் இரண்டு ஆண்டுகள் வளர்ந்தது.

2013 ஆம் ஆண்டு சிறுமி தனது பெற்றோரிடம் மீண்டும் வந்து சேர்ந்தாள்.

பெற்றோர்களுடன் பழக்கமில்லாத காரணத்தால், அவள் அடிக்கடி அழுது கொண்டே இருந்தாள்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவளை துன்புறுத்தியதாக தெரிந்தது.

2014-ல் குழந்தையை இருவரும் கொடூரமாக தாக்கியதில் அந்த குழந்தை மயங்கியதாகவும், அந்த குழந்தையின் உடலை ஒரு பாத்திரத்தில் வைத்து எரித்து அந்த சாம்பலை சமையலறையில் அடுப்புக்கு அடியில் வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

குழந்தையைப் பற்றி விசாரித்தவர்களிடம் பல கதைகளை இருவரும் கூறினர்.

குழந்தையின் மாமா அந்த பெட்டியை திறந்து பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். அதனை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதலில் குற்றவாளியுடன் சேர்ந்து கொலை செய்ததாக தாயின் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டதாக தெரிய வந்தது.