கார் பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள், ஹெல்மெட் திருடிய மூவர்……..

சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் உள்ள கார் நிறுத்துமிடத்தில் 3 இளைஞர்கள் அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும், ஹெல்மெட்டையும் திருடியுள்ளதாக செப்டம்பர் 15-ஆம் தேதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அங்கே அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும், காவல்துறை கண்காணிப்பு கேமராக்களையும் காவல்துறை ஆய்வு செய்தது.

அதில் பதிவாகி இருந்த காட்சிகளைக் கொண்டு மூவரும் அடையாளம் காணப்பட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் 17 வயதிற்குள் உட்பட்டவர்கள்.

அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும், ஹெல்மெட்டும் கைப்பற்றப்பட்டது.

செப்டம்பர் 18-ஆம் தேதி (இன்று) மூவரில் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படவுள்ளது.