சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற அதிபர் பதவியேற்பு விழா……

சிங்கப்பூரில் நேற்றிரவு அதிபர் பதவியேற்பு விழா நடைபெற்றது. திரு. தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவி ஏற்றார்.

அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.

இஸ்தானாவில் பதவியேற்பு சடங்குகள் நடைபெற்றது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள்,பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து கடிதம், தொலைபேசி அழைப்பு மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.