ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!!

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!!

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மின்சாரம் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்புகிறது.

நேற்று (ஏப்ரல் 28) இரு நாடுகளும் பெரும் மின் தடையை சந்தித்தன.

இதனால் பொது போக்குவரத்து, மின் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டன.

அப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

இன்று அதிகாலை ஸ்பெயினின் பிரதான பகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாக REE மின்சார ஆபரேட்டர் தெரிவித்தார்.

மின் தடைக்கான காரணம் தெரியவில்லை.

ஸ்பெயினில் மின் தடை தொடங்கியிருக்கலாம் என்று போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டனக்ரோ கூறினார்.

மேலும் மின் தடைக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறினார்.

5 வினாடிகளில் திடீரென சுமார் 15 கிகாவாட்ஸ் மின்சாரம் காணாமல் போனதாகக் கூறினார்.

அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு 15 கிகாவாட்ஸ் ஆகும்.

ஸ்பெயின் முழுவதும் மின்சாரம் எப்போது திரும்பும் என்று திரு. சான்செஸ் கூறவில்லை.

இதனால் தொழிலாளர்கள் இன்று (ஏப்ரல் 29) வீட்டிலேயே இருக்குமாறு அவர் கூறினார்.