சிங்கப்பூரில் முதல் முறையாக மதிய வேளையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டம்…!!!

சிங்கப்பூரில் முதல் முறையாக மதிய வேளையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இன்று முதல் முறையாக, மதிய உணவு வேளையின் போது பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் செயல்க் கட்சி (PAP) மதியம் 12 மணிக்கு UOB பிளாசாவிற்கு அருகிலுள்ள ராஃபிள்ஸ் பிளாசாவில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது.

இன்றிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மேலும் ஐந்து கூட்டங்கள் நடைபெறும்.

மக்கள் செயல்க் கட்சி அவற்றில் மூன்றை நடத்தும்.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்டேடியம்,தெம்பனிஸ்- மெரீடியன் தொடக்கப்பள்ளி மற்றும் சன் பிளாஸாவிற்கு வெளியே உள்ள பகுதிகளில் மக்கள் செயல் கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாட்டாளிக் கட்சி (WP) யூசுப் இஷாக் உயர்நிலைப் பள்ளியிலும், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (SDP) உட்லண்ட்ஸ் மைதானத்திலும் கூட்டங்களை நடத்த உள்ளன.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan