காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்...!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்...!!!

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஐந்து சுற்றுலாப் பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று போலீசார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் பாஹால்கம் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது.

எனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு வருகை தருவதுண்டு.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan