திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்…!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!!

திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்...!!! இரங்கல் தெரிவித்த பிரதமர் வோங்..!!!

சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி யூசோப் இஷாக்கின் மனைவி திருவாட்டி நூர் ஆயிஷா காலமானார்.

அவருக்கு வயது 91.

திருவாட்டி நூர் ஆயிஷாவின் மறைவுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் தனது இரங்கலை தெரிவித்தார்.

திருவாட்டி நூர் ஆயிஷா தனது கணவரின்
பதவிக்காலத்தில் அவருக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார் என்று திரு. வோங் கூறினார்.

அவர் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

திருவாட்டி நூர் ஆயிஷாவின் அர்ப்பணிப்பு குணம் மற்றும் சேவை பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் மலாய் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்ற பெருமை திருவாட்டி நூர் ஆயிஷாவைச் சேரும்.

சிங்கப்பூரின் ஆரம்ப நாட்களில் நாட்டிற்கு முக்கிய பங்களிப்பாளராக அவர் நினைவுகூரப்படுகிறார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan