விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!!

விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர்!! இன்று குற்றச்சாட்டு!!

விமானப் பயணத்தின்போது விமானப் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 20 வயதுடைய இந்திய நபர் மீது இன்று (ஏப்ரல் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நண்பகல் 12.05 மணியளவில் அந்த நபர் அந்த 28 வயதுடைய பெண்ணிடம் அத்துமீறியதாக காவல்துறை கூறியது.

விமானப் பயணத்தின்போது அந்த பெண் ஊழியர் பெண் பயணி ஒருவரைக் கழிவறைக்கு அழைத்து சென்ற போது இச்சமத்துவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தரையில் டிஸ்யூ பேப்பரைக் கண்டா அந்த பெண் ஊழியர் அதை எடுப்பதற்காக அவர் குனிந்தார்.அப்போது அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் அவரது பின்னால் வந்து அவரைப் பிடித்து கழிவறைக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அந்த பெண் பயணி உடனடியாக அந்த பெண் ஊழியர் கழிவறையில் இருந்து வெளியேற உதவினார்.

இது குறித்து உடனடியாக ஊழியர்களின் மேற்பார்வையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மேலும் விமானம் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தவுடன் விமான நிலையக் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan