சைனாடவுன் பகுதியில் தீ விபத்து...!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் இன்று (ஏப்ரல் 21) காலை தீ விபத்து ஏற்பட்டது.
புகையை சுவாசித்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 4.35 மணியளவில் கட்டிடத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பலர் கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.
அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே கூடி நிற்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
துப்புரவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தீயை பத்திரமாக அணைத்தனர்.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan