இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!!

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிகளில் குறைந்தது S$2.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் Facebook மற்றும் Tiktok இல் சில விளம்பரங்களைப் பார்த்தார்கள்.

விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அவர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டனர்.

சந்தா கட்டணத்தை செலுத்த அவர்களுக்கு ஒரு வலைத்தள முகவரி வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி அட்டை விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு பணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மோசடி செய்பவர்கள் பரிந்துரைத்தபடி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் ஒரு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்தனர்.

மோசடி நபர்கள் தீய மென்பொருள் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு SMS மூலம் அனுப்பப்பட்ட OTP எண்களைப் பெற்றனர்.

மோசடி செய்பவர்கள் வங்கி அட்டைகளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்று இணையதளத்தில் நடக்கும் மோசடி சம்பவங்களில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை பொதுமக்களை எச்சரித்தது.