அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!!

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்...!!!

இந்திய விமானப் பணிப்பெண் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது தெரிய வந்தஉடன் அவர் செய்த செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது.

விமானப் பணிப்பெண் பிரியா சர்மா ஆன்லைனில் 500 ரூபாய் (S$8)கட்டி தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார்.

அவர் அதிர்ஷ்டவசமாக 210 மில்லியன் ரூபாய் (S$3 மில்லியன்) வென்றுள்ளார்.

இந்தத் தகவல் தெரியவரும் பொழுது அவர் விமானத்தில் இருந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினார்.

பிறகு விமானம் புறப்பட்டதும், அவர் ஒரு முடிவை எடுத்தார்.

அவர் விமானப் பணிப்பெண் வேலையை துறப்பதாக அனைத்து பயணிகளுக்கும் முன்பாக அறிவித்தார்.

விமானப் பணிப்பெண்ணாக இதுவே தனது கடைசி பயணம் என்று அவர்களிடம் கூறினார்.

நீண்ட காலமாக பணப் பிரச்சனையில் போராடி வந்த பிரியா, தனது கனவுகள் நனவாகப் போவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட பயணிகள் அனைவரும் உற்சாகமாக கைதட்டினர்.

விமானி பயணிகள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan