மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!!

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது.
இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக கொலம்பியா சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
74 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக அவர் கூறினார்.
மத்திய மேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டிலேயே அந்நகரில் தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மஞ்சள் காய்ச்சல் Aedes,Haemagogus கொசுக்களால் பரவுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan