ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!!

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.பகல் நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.

சில நாட்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யக்கூடும்.

சுமத்ராவிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக சிங்கப்பூரில் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.மேலும் பலத்த காற்று வீசலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

இந்த மாதம் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு கிட்டத்தட்ட சராசரி அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெப்பநிலை :

பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இடையே இருக்கும்.

சில நாட்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.