Latest Tamil News Online

Taylor Swift நிகழ்ச்சி பற்றிய புதிய அப்டேட்…..

அமெரிக்க பாடகி-பாடலாசிரியர் டெய்லர் ஸ்விஃப்ட் சிங்கப்பூரின் தேசிய மைதானத்தில் ஆறு நிகழ்ச்சிகளை நடத்தவிருப்பதாக அண்மையில் Singapore National Stadium தெரிவித்துள்ளது.

அவர் மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மூன்று நிகழ்ச்சிகள் நடத்துவார் என்று கூறப்பட்டிருந்தது.இப்போது அவரது தி ஈராஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மார்ச் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதலாக நிகழ்ச்சி நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சிகளுக்கான பொது விற்பனை ஜூன் 23 மதியம் தொடங்கி ஜூன் 28 மதியம் வரை தொடங்கும்.

விற்பனையில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான அணுகல் குறியீட்டைப் (Access Code) பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

ஜூலை 5 மதியம் முதல் ஜூலை 7 காலை 9 மணி வரை முன் விற்பனை தொடங்கும் போது UOB கார்டுதாரர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறலாம்.

ஆன்லைன், ஹாட்லைன் மற்றும் சிங்போஸ்ட் விற்பனை நிலையங்கள் மூலம் ஜூலை 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பொது விற்பனை தொடங்குகிறது.

சிங்கப்பூரில் நடைபெறும் Taylor Swift – இன் நிகழ்ச்சிகளில் 2,00,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.