Singapore Breaking News in Tamil

கர்ப்பிணி தாயை சுட்ட 2 வயது மகன்!

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் தனது கர்ப்பிணி தாயை 2 வயது சிறுவன் சுட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இச்சம்பவம் சென்ற வாரம் நடந்தது.

லாரா தனது 2 வயது மகன் தன்னை முதுகில் சுட்டு விட்டதாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

லாராவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரின் வயிற்றில் இருந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால்,காப்பாற்ற முடியவில்லை.

துப்பாக்கி சூட்டால் சில மணி நேரம் கழித்து லாரா இறந்தார்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்றபோது லாரா சுயநினைவுடன் இருந்தார்.

வழக்கமாக பூட்டி இருக்கும் அறைக்குள் தனது மகன் துப்பாக்கி வைத்து விளையாடி கொண்டிருந்தாக அதிகாரிகளிடம் கூறினார்.

அது லாராவின் கணவருக்கு சொந்தமான துப்பாக்கி.

இச்சம்பவம் நடந்த சமயத்தில் அவர் வீட்டில் இல்லை.