Singapore News in Tamil

பூமி நம்மை தாங்கும் முன்னே…. கருவில் நம்மை தாங்கிய தாய்! பசியால் பிள்ளை துடிப்பதை தாங்க முடியாமல் பால் பவுடரை திருடிய தாய்!

பால் மாவு, அழகு பொருட்கள், விளையாட்டு சாமான்களை ஒரே நாளில் மூன்று கடைகளில் திருடிய இந்தோனேசியவைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 பால்மாவு டின்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் இரண்டு குற்றங்கள் தீர்ப்பளிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவர் விளையாட்டு சாமான்கள், அழகுப் பொருட்கள் ஆகியவற்றையும் திருடியுள்ளார்.

சிந்தியா,“ தனது குழந்தை பசியால் வாடியது. தாய்மை உணர்வால் பால்மாவை திருடியதாக ´´ நீதிமன்றத்தில் கூறினார்.

இச்சம்பவம் மே 28-ஆம் தேதி நடந்தது.

அவர் அப்போது சிங்கப்பூரில் 30 நாள் வருகை அனுமதியில் இருந்தார்.

Cold Storage கடையில் பால்மாவு டின்களை திருடியபோது பிடிபட்டார்.

அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டார்.

சிந்தியாவுக்கு மூன்று வார சிறைத் தண்டனையை நீதிமன்றம் உத்தரவிட்டது.